Friday 3rd of May 2024 01:53:44 AM GMT

LANGUAGE - TAMIL
-
பத்தினிபுரம் பனையோலைசார்ந்த உற்பத்திக்கிராமம் அமைச்சர் பிரசன்ன ரணவீர திறந்து வைப்பு!

பத்தினிபுரம் பனையோலைசார்ந்த உற்பத்திக்கிராமம் அமைச்சர் பிரசன்ன ரணவீர திறந்து வைப்பு!


பத்தினிபுரம் பனையோலைசார்ந்த உற்பத்திக்கிராமம் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர அவர்களால் இன்று(19) திறந்துவைக்கப்பட்டதோடு 2.2மில்லியன் ரூபா பெறுமதியான உபகரணங்களும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

பிரம்புகள், பித்தளை, மற் பாண்டங்கள், மரப்பொருட்கள் மற்றும் கிராமிய கைத்தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தார்.

தம்பலகாமம் பிததேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பத்தினிபுரம் கிராமத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர் அங்கு பனையோலை சர்ந்த கிராமகாக பிரகடணப்படுத்தப்பட்ட குறித்த கிராமத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பனை பொருள் சார் உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட கட்டிடத்தினையும் பார்வையிட்டார்.

மேலும் அங்கு தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதார உபகரணங்களையும் வழங்கிவைத்தார்.

நிகழ்வின் இறுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் கைத்தொழில் சார் மூலப்பொருற்களை போக்குவரத்து செய்வதில் காணப்படும் குறைபாடுகளை தாம் வெகுவிரைவில் நிவர்த்தி செய்வதாக தெரிவித்தார் மேலும் கிராம மட்டங்களில் முன்னெடுக்கப்படும் கைத்தொழிற்துறை உற்பத்திகளை சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை தாம் முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகளை தமது அமைச்சு மேற்கொள்வதாக தெரிவத்த அவர் அதன் மூலமாக கிராம மட்டங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியும் என அவர் இதன்போது தெரிவித்தார்.


Category: உள்ளூர, புதிது
Tags: இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE